சமீபத்தில் இலங்கை நாடாளுமன்ற குழு ஒன்று நமது நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட வந்திருந்தது. அது கண்டு ஆத்திரமடைந்த தமழக உறுப்பினர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதற்கு சபாநாயகர் வந்திருந்த குழுவினரிடம் மன்னிப்பு கூறினாராம். இது பற்றி தமது "துக்ளக்" இதழிலும் கூட திரு. சோ அவர்கள் குறிப்பிட்டு இவ்வாறு செய்திருக்க வேண்டாம், வெளிநடப்பு செய்திருந்தாலே போதும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் தமிழக உறுப்பினர்கள் செய்ததில் எந்த தவறுமில்லை. சுரணை உள்ளவர்கள் செய்வதைத்தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். ஒரு பஞ்சாபி அல்லது வங்காளி அல்லது இந்திக்காரன் மீது அட்டூழியம் செய்த ஒரு அந்நிய நாட்டு குழுவை இப்படி அழைத்திருப்பார்களா ஆட்சியாளர்கள்? அப்படி நடந்திருந்தால் லாலுவும், முலாயம், பாதல், தாக்கரே அல்லது மம்தா போன்ற வடநாட்டு உறுப்பினர்கள் எல்லாம் மாலையிட்டு மரியாதை செய்து வந்தவனின் பேச்சை கேட்டுக்கொண்டிருப்பார்களா? அல்லது அவர்களின் செய்கைக்கு சபாநாயகர் மன்னிப்பு கேட்டிருப்பாரா?
Thursday, August 11, 2011
புண்படும் தமிழ் உணர்வுகள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment