பா.ஜ.க.வின் திரு. ஜஸ்வந்த் சிங் யாருக்கும் தெரியாத முத்து ஒன்றை உதித்திருக்கிறார். " சக எம்.பி.க்களான திரு. இராசாவும், கனிமொழியும் சிறையில் வாடுகிறார்களாம். இது அவருக்கு வேதனையாக இருக்கிறதாம். அவர்களுக்கு பெயில் மறுக்கப்பட்டது தவறாம்" இன்னும் என்னவென்னல்லாமோ உளறியிருக்கிறார் திரு. சிங். இவர்கள் சராசரி அரசியல்வாதிகள் மட்டுமில்லை. நம் ஜனநாயகத்திற்கு வெட்டு வைக்கும் சூனியக்காரர்கள். இவர்களை எல்லாம் ஒரு மனிதர்கள் என்று எண்ணுவது நம் தவறு. இருந்தாலும் முக்கிய எதிர் கட்சி எம்.பி. சொல்லுகிறார் என்றால் கேட்கத்தானே வேண்டும். கேட்டு சும்மா இருக்க முடியுமா? இந்திய குடிமகன் என்ற வகையில் என்னுடைய உளறலுக்கும் இடம் இருக்கத்தானே செய்யும்.
முதற்கண் இந்த ஜஸ்வந்த் சிங் ஒன்றை மறந்து விட்டார். நாட்டின் உயரிய நீதிமன்றமான உச்ச நீதி மன்றமே தீர்ப்பு சொன்னபிறகு அதை விமரிசிக்க யாருக்கும் உரிமை இல்லை. மறு ஆய்வு மனு போடலாம் அவ்வளவுதான். ஜாமீன் வழக்கில் அதற்கும் இடமில்லை.
சரி சக எம்.பி.க்கள் என்பதால் அவர்கள் தவறு செய்கின்றபோது வேடிக்கை பார்க்க வேண்டுமா? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதெல்லாம் இவர்களுக்கு கிடையாதா? இது கூட இவருக்கு தெரியாமல் இருக்குமா? தெரியும். அதற்கு காரணம் அரசியல் மட்டுமே.
நாட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் வாடுவது வெறும் இராசா, கனிமொழி மட்டுமில்லை. எண்ணற்ற அப்பாவி இந்தியா குடிமக்கள் வாதாட வக்கில்லாமல் வெறும் பொய் வழக்குகளில் சிக்கி இந்தியா சிறைச்சாலைகளில் வாடுகிறார்கள். அவர்களை ஏறெடுத்து பார்க்க கூட இந்த நாட்டில் நாதியில்லை. அதற்கு ஆதரவாக ஒருநாளும் இந்த சிங்குகள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததில்லை. இப்பொழுது மட்டும் பொத்துக்கொண்டு வருகிறார். அதுவும் சிறைபட்ட சுமார் ஐந்து மாதம் கழித்து யாவருக்கு இறக்கம் வந்திருக்கிறது. இப்போது என் வந்திருக்கிறது இந்த கனிவு.
இந்த ஜஸ்வந்த் சிங் சில நாட்களுக்கு முன்னர் செல்வி. ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். என்ன பேசினார்களோ. மரியாதை நிமித்தம் என்றார்கள். பா.ஜ.க. சார்பாக தூது விட்டிருப்பார்கள். அம்மையார் பிடி கொடுத்திருக்க மாட்டார். பொருத்து பார்த்துவிட்டு இந்த கனி கசக்கும் என்ற நிலையில் இப்படி தி.மு.கவுக்கு சாதகமாக குரல் கொடுத்திருக்கிறார். இதே குரலை சில மாதங்களுக்கு முன்பு லாலுவும், சிபு சோரனும் சிறையிலிருந்த பொது விட வேண்டியதுதானே. எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தி.மு.க.வை நெருங்க காவி கட்சி திட்டம் போடுகிறது. அம்மையார் ஒன்று காங்கிரசுடன் செல்வார் அல்லது தோழர்களுடன் செல்வார் என்ற நிலை தெளிவாகி வருகிறது. அதற்காக இப்போதே இருக்கட்டும் என்று உடன் பிறப்புகளுடன் கை கோர்கிரார்கள் போலிருக்கிறது. தி.மு.க.வும் சமீப காலமாக சில விஷயங்களில் காங்கிரசுக்கு எதிராக செயல் பட்டு வருகிறார்கள். பொது கணக்குக்குழு, லோக்பால் போன்ற அமைப்புகளில் அவர்களது செயல்பாடு பா.ஜ.க. வுக்கு இனிக்கும் விதமாக இருப்பதை கவனித்தால் இது புரியும்.

Jaswant Singh was once commented upon as the right man in the wrong party... now it is proven that he is the right man FOR the wrong party.....
ReplyDelete